2000 வருட பழமையான மம்மி வயிற்றில் சிதையாத கரு.. ஆச்சரியத்தில் உறைந்து போன விஞ்ஞானிகள்
எகிப்தில் 5000 வருடம் பழமையான மம்மி வயிற்றில் கரு சிதையாமல் இருப்பதால் விஞ்ஞானிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
எகிப்து நாட்டில் இறந்த உடல்களை மம்மி என்ற பெயரில் பதப்படுத்தும் வழக்கம் உள்ளது. எகிப்தில் கி.மு. 3500 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட உடல்கள் சுற்றுச்சூழலின் காரணமாக இயற்கையாகவே மம்மிக்களாக உருவாகின.
இந்நிலையில், எகிப்தின் 2000 ஆண்டுகள் பழமையான மம்மியின் வயிற்றில் கரு ஒன்று சிதையாத நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விஞ்ஞானிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட இந்த மம்மியின் வயது சுமார் 30 வயது இருக்க வேண்டும் என்றும் கி.மு. முதல் நூற்றாண்டில் அவர் இறந்திருக்கலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மம்மிக்கு ‘மர்ம பெண்மணி’ என்று நிபுணர்கள் பெயரிட்டுள்ளனர். கருவைக் கண்டறிய மம்மிக்கு CT ஸ்கேன் செய்ததில் ஆச்சரியத் தகவல் வெளிவந்துள்ளது. இறந்த பிறகு சடலத்தில் உள்ள கரு உட்பட சடலங்களில் காணப்படும் இரத்த pH கணிசமாகக் குறைந்து அமிலமாகிறது.
அம்மோனியா மற்றும் ஃபார்மிக் அமிலத்தின் செறிவு காலப்போக்கில் அதிகரிக்கிறது. எனவே பண்டைய எகிப்தில் மம்மிகள் இயற்கையாக பாதுகாக்கப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.