தமிழக வீரர் வேண்டாம்... டி20 உலகக்கோப்பைகு இவரை இந்திய அணியில் எடுங்க! இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன்
இலங்கை அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன், வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில், வருண் சக்ரவர்த்தியை விட வேறொரு வீரருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
உலகக்கோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து அணிகளும் இப்போதில் இருந்தே தங்கள் அணிகளை தயார் செய்து வருகின்றன.
அந்த வகையில், இந்திய அணியில் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்திக்கு வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இவரின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள எதிரணியினர் திணறி வருவதால், இவரை இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரில் பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஆனால், இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முரளிதரன், இந்திய அணியின் தேர்வு குறித்து பேச ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல்லில் வீரர்கள் ஆடும் விதம், வீரர்களின் பார்ம் ஆகியவற்றை பொறுத்துத்தான் அணி தேர்வு அமையும். எனது தேர்வு கண்டிப்பாக குல்தீப் யாதவ் தான்.
தான் விக்கெட்டுகளை வீழ்த்தவல்ல பவுலர் என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக ஐபிஎல்லில் அவர் ஆடும் அணி அவரை ஆடும் லெவனில் எடுப்பதில்லை.
வருண் சக்கரவர்த்தி நல்ல பவுலர் தான் என்றாலும், அஜந்தா மெண்டிஸ் அல்லது சுனில் நரைன் அளவுக்கு கிடையாது என்று கூறியுள்ளார்.