வீடு முழுவதும் சிதறிக் கிடந்த சதைத் துணுக்குகள்: இளம்பெண்ணுக்கு நேர்ந்த கோரம்
இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரைக் கொலை செய்த நபர் அவரை சித்திரவதை செய்து அவரது உடலின் பாகங்களை வீடு முழுவதும் சிதறச்செய்திருந்த பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கொடூரமான முறையில் கொல்லப்பட்ட இளம்பெண்!
கடந்த வாரம், தெற்கு கரோலினாவில் வாழும் லாரா (Laura Miller, 35) வீட்டுக்குச் சென்ற அவரது சகோதரர், தன் தங்கை கோரமான முறையில் இறந்துகிடந்ததைக் கண்டு பொலிசாரை அழைத்துள்ளார்.
பொலிசார் அந்த வீட்டுக்குச் சென்றபோது, வீட்டுக்குள் லாராவின் உடலைச் சுற்று உப்பு தூவப்பட்டு, மரச் சிலுவைகள் ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளனர். லாராவின் உடலின் மேல் பகுதியிலிருந்து துண்டுகள் வெட்டி எடுக்கப்பட்டு, வீடு முழுவதும் சிதறிக்கிடக்க, அவரது நாவு வெட்டப்பட்டு வேறொரு அறையில் போடப்பட்டுள்ளது. பல முறை வயர் ஒன்றால் கழுத்து நெறிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட லாராவின் கணுக்கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு, அவரது தொடைகள் தீவைத்து எரிக்கபட்டிருந்தன.
யார் அந்த பயங்கரக் கொலையாளி?
பொலிசாரையே அதிரவைத்த இந்த கொடூரக் கொலையை செய்ததாக லாராவுக்கு அறிமுகமானவரான Miguel Gonzales-Rasalas என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லாரா கொல்லப்படும்போது கொலையாளியுடன் போராடியதால் ஏற்பட்ட கீறல்கள் மற்றும் இரத்தத்துடன் சிக்கினார் Miguel.
லாராவின் காரை திருடிக்கொண்டு தப்பியோட முயன்ற Miguelஐ பொலிசார் கைது செய்தனர். அவர் எதற்காக லாராவை இவ்வளவு கொடூரமாக கொலை செய்தார் என்பது தெரியவில்லை. விசாரணை தொடர்கிறது.