பிரித்தானிய பத்திரிகையாளர் விவகாரம்: விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்
பிரித்தானிய பத்திரிகையாளர் டோம் பிலிப்ஸ் மற்றும் பூர்வகுடி நிபுணர் புருனோ பெரேரா ஆகியோரின் கொலைகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் எட்டு பேர் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர்களில் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு ஏற்கனவே தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால், உடல்களை மறைக்க உதவியதாகக் கூறப்படும் மேலும் 5 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
பத்திரிகையாளர் பிலிப்ஸ் மற்றும் பெரேரா ஜூன் 5ம் திகதி பிரேசிலின் ஜவாரி பள்ளத்தாக்கில் தரவுகள் சேகரிக்கும் பயணத்தில் இருந்தபோது காணாமல் போனார்கள்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் தங்கள் உடல்களை புதைத்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து மாயமான இருவரின் உடல்கள் வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டன.
இந்த வழக்கில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.