உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க உதவும் முருங்கைக்கீரை பொடி.., எப்படி செய்வது?
முருங்கை இலைகளை தினமும் உணவில் எடுத்துக்கொண்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.
இதுமட்டுமில்லாமல் முடி வளர்ச்சியை அதிகரிக்க, நரைமுடி மறைய மற்றும் உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
அந்தவகையில், முருங்கைக்கீரையை பயன்படுத்தி முருங்கைக்கீரை பொடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உளுந்து- 1 ஸ்பூன்
- கடலை பருப்பு- 1 ஸ்பூன்
- துவரம் பருப்பு- 1 ஸ்பூன்
- முருங்கை கீரை- 2 கைப்பிடி
- நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 10
- மிளகு- 1 ஸ்பூன்
- பூண்டு- 5 பல்
- சீரகம்- 1 ஸ்பூன்
- வெள்ளை எள்ளு- 1 ஸ்பூன்
- தனியா- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- புளி- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- பெருங்காயம்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் உளுந்து, கடலை பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து முருங்கை இலைகளை வெயிலில் உலரவைத்து எடுத்து அதனை 5 நிமிடம் வாணலில் மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் வாணலில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம், வெள்ளை எள்ளு, தனியா, கறிவேப்பிலை, புளி சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து வறுத்த பொருட்களை நன்கு ஆறவைத்து மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக இதில் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து கலந்தால் சத்தான முருங்கை கீரை பொடி தயார்.
இந்த ஆரோக்கியமான முருங்கை கீரை பொடி இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் பிணைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |