மியான்மரில் இராணுவ தளங்கள் மீது பயங்கர தாக்குதல்.. மர்ம நபர்களை பிடிக்க பொலிஸ்-இராணுவம் அதிரடி! வெளியான திகிலூட்டும் காட்சி
மியான்மரில் உள்ள இரண்டு விமான தளங்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய நகரமான மாக்வே அருகே உள்ள விமானத் தளம் மீது வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு முதல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனைத்தொடர்ந்து இரண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் வாசிகளை மேற்கோள் காட்டி டெல்டா செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் மியான்மர் விமானப்படைச் சேர்ந்த 6 வீரர்கள் கொல்லப்பட்டதாக டெல்டா செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலை தொடர்ந்து இ மாக்வே பிராந்தியத்தியத்தின் அனைத்து நுழையும் மற்றும் வெளியேறும் சாலைகளை காவல்துறை மற்றும் இராணுவத்தினர் மறித்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Horrific attack on two air bases in #Myanmar. #Apr29Coup#WhatsHappeningInMyanmar #Myothit #Momuak #Khudro pic.twitter.com/Dp95JITMdC
— khudro manush (@KhudroM) April 29, 2021
சோதனைக்கு நிறுத்தாத வாகங்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கியால் சுடுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Horrific attack on two air bases in #Myanmar#Apr29Coup#WhatsHappeningInMyanmar #Myothit #Momuak pic.twitter.com/qXeC0ObFdB
— khudro manush (@KhudroM) April 29, 2021
சோதனை சாவடியில் நிறுத்தாமல் சென்ற இருவரை இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டுதாகவும், அதில் இருவரும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.