மியான்மர் நிலநடுக்கம்: லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன? 10,000-ஐ தாண்டுமா பலி எண்ணிக்கை?
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு வாழும் தமிழர்கள் உட்பட 25 லட்சம் இந்திய வம்சாவளியினரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மியான்மர் நிலநடுக்கம்
மியான்மரில் நேற்று முன்தினம் காலை 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, 6.8 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
மியான்மரில் (பர்மா) மோனிவா அருகே ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 1600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 3,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் மியான்மர் தலைநகர் நேப்பிடா, சாகைங், மண்டலை, பைகோ, மாகுவே, ஷான் ஆகிய 6 மாகாணங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களின் நிலை என்ன?
மியான்மரில் தற்போது 25 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களில் 60% பேர் தமிழர்கள் ஆவார்கள், இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மண்டலை மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.
இந்த நிலநடுக்கத்தால் அவர்களின் வீடுகள் மற்றும் உடமைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இதையடுத்து மியான்மர் நிலநடுக்கம் தொடர்பான உதவிக்கு இந்திய அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. மேலும் நிலநடுக்கம் தொடர்பான தமிழர்களுக்கான உதவி எண்களை, அயலகத் தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது.
The 7.7 magnitude earthquake that occurred in #Myanmar also hit #China and #Thailand.
— 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 (@HamdiCelikbas) March 28, 2025
In #Bangkok, the capital of Thailand, the water from a pool on the terrace of a building spilled out due to the impact of the tremor, while those swimming in the pool fell down. pic.twitter.com/ouHRdg7osR
அதன்படி மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், 1800 309 3793, +91 80690 09901 மற்றும் +91 80690 09900 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சர்வதேச ஊடகங்களின் தகவல் படி, உயிரிழப்பு 10,000-ஐ தாண்டலாம் என கூறப்படும் நிலையில், 2 கோடிக்கும் அதிகமானோருக்கு நிவாரண உதவி தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |