செருப்பில் 'முகத்தை' ஒட்டி நூதனமாக எதிர்ப்பு தெரிவிக்கும் இளைஞர்கள்! மியான்மரில் நடப்பது என்ன?
மியாமன்மரில் சில இளைஞர்கள் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, இராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லேங்கின் முகத்தை ஸ்டிக்கராக தங்கள் காலணிகளில் ஒட்டியுள்ளனர்.
மியானமரில் கடந்த பிப்ரவரி 1-ஆம் திகதி மியான்மர் இராணுவத்தினர், அரசு தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் அனைவரையும் கைது செய்து ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து, நாட்டை இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தது.
அதனையடுத்து, கடந்த இரண்டரை மாதங்களாக அந்நாட்டு மக்கள், ஆங் சான் சூகியின் National League for Democracy கட்சியினர், மாணவர்கள், அரசு அதிகாரிகள் என ஒட்டுமொத்த மக்களும் இராணுவ ஆட்சிக்கு எதிரப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆனால் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களை இராணுவ பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்று குவித்து வருகின்றனர்.
இதுவரை குழந்தைகள், பெண்கள் உட்பட 700-க்கும் மேற்பட்ட மக்களை இராணுவம் சுட்டுக் கொலை செய்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும், ஜனநாயக ஆட்சியை கேட்டு தொடர்ந்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் பல்வேறு வகையிலான நூதன போராட்டங்களின் மூலம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மியான்மரின் மிகப் பெரிய நகரமான யங்கொனில் உள்ள இளைஞர்கள் தங்கள் காலணிகளின் அடிப்பக்கத்தில் இராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லேங்கின் முகத்தை ஸ்டிக்கராக ஒட்டி புதுவிதமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.
"இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்ப்பதற்கான எங்களின் விருப்பம், நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் உள்ளது என்பதைக் காண்பிப்பதற்கான ஒரு செயல்திறன் இது" என்று ஒரு இளைஞர் கூறியுள்ளார்.
Some youths in #Yangon pasted the face of coup leader Min Aung Hlaing on the soles of their shoes as a form of protest. “It’s a performance to show that the desire to oppose the military dictatorship is present in every step we take,” said a youth. #WhatsHappeningInMyanmar pic.twitter.com/3LnVXRMFdx
— Myanmar Now (@Myanmar_Now_Eng) April 16, 2021