ஆங் சன் சூ கி-க்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை! மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பு
மியான்மர் ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சன் சூகி-க்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், மியான்மர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற 76 வயதான ஆங் சன் சூகி-யை பதவியிலிருந்து அகற்றி அதிகாரத்தை கைப்பற்றியது அந்நாட்டு இராணுவம்.
அதிகாரத்தை கைப்பற்றி இராணுவம், கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஆங் சன் சூகி வாக்கு மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியது.
இதைத்தொடர்ந்து ஆங் சன் சூகி உட்பட மியான்மரின் முக்கிய அரசியில் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
அதுமட்டுமின்றி, ஊழல், ரகசிய சட்டத்தை மீறுதல் மற்றும் பொது அமைதியின்மையை தூண்டுதல் என ஆங் சன் சூகி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஆங் சன் சூகி மீது 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால், அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
இந்நிலையில், இதுதொடர்பில் விசாரணை மேற்கொண்டு மியான்மர் நீதிமன்றம், இயற்கை பேரிடர் சட்டத்தின் கீழ் கருத்து வேறுபாடுகளைத் தூண்டுதல் மற்றும் கொரோனா விதிகளை மீறிய குற்றச்சாட்டில் சூகி குற்றவாளி என அறிவித்துள்ளது.
இதற்காக சூகி-க்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.