பாலைவனமருகே மீண்டும் காணப்பட்ட மர்மத்தூண்: குழப்பத்தில் அதிகாரிகள்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ஒரு மர்மமான ஒற்றைக்கல் தூண் அங்குள்ள காவல்துறை அதிகாரிகளை குழப்பியுள்ளது.
மர்மத்திற்கு விளக்கம் வேண்டும்
லாஸ் வேகாஸ் பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் கூறுகையில், தன்னார்வ தேடல் மற்றும் மீட்புப் பிரிவின் உறுப்பினர்கள் பாலைவனத்தில் பதிக்கப்பட்டிருந்த அந்த தூணை முதல்முறையாக கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் அந்த மர்மத்தூணானது எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் தகவல் இல்லை என்றே பொலிசார் தெரிவிக்கின்றனர். மேலும், சமூக ஊடகப்பயனர்கள் இந்த மர்மத்திற்கு விளக்கம் காண வேண்டும் என்றும் கேட்டுகொண்டனர்.
2020ல் இருந்தே உலகின் பல பகுதிகளில் இதுபோன்ற மர்மத்தூண் திடீரென்று காணப்பட்டு வருகிறது. 2020 நவம்பர் மாதம் 12 அடி உயரம் கொண்ட மர்மத்தூண் ஒன்று உட்டாவில் உள்ள பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
தென்கிழக்கு வேல்ஸில்
தொடர்புடைய பகுதியானது மக்கள் நடமாட்டம் இல்லாத இடம் என்பதால், பொலிசார் பொதுமக்கள் நலன் கருதி அந்த மர்மத்தூண் காணப்பட்ட பகுதியை வெளியிட மறுத்தனர்.
MYSTERIOUS MONOLITH!
— LVMPD (@LVMPD) June 17, 2024
We see a lot of weird things when people go hiking like not being prepared for the weather, not bringing enough water... but check this out!
Over the weekend, @LVMPDSAR spotted this mysterious monolith near Gass Peak north of the valley. pic.twitter.com/YRsvhJIU5M
அதைத் தொடர்ந்து ருமேனியா, மத்திய கலிபோர்னியா ஆகிய பகுதிகளிலும் மர்மத்தூண் திடீரென்று தோன்றியது. தற்போது லாஸ் வேகாஸ் பாலைவனம் அருகே காணப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 10 அடி உயரம் கொண்ட மர்மத்தூண் ஒன்று தென்கிழக்கு வேல்ஸில் ஒரு மலைப்பகுதியில் தோன்றியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |