அமெரிக்காவின் பிரபல நகரத்தை பதற வைத்த மர்ம நபர்... குழந்தை உட்பட 4 பேர் படுகொலை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தை உட்பட நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Orange நகரில் உள்ள வணிக வளாகத்திலே இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த இரண்டு வாரங்களில் நடக்கும் 3வது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும்.
பொலிசாருடனான துப்பாக்கிச் சூடு மோதலில் காயமடைந்த சந்தேக நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து Orange காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் அளித்த தகவலின் படி, 202 டபிள்யூ. லிங்கன் அவென்யூவில் உள்ள இரண்டு அடுக்கு வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு குறித்து அழைப்பு வந்தது.
சம்பவயிடத்திற்கு அதிகாரிகள் விரைந்தனர், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது மற்றும் பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என உறுதிப்படுத்தினார்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அவரின் நிலைமை தெரியவில்லை.
துப்பாக்கிச் சூடு நடத்தியது யார், எதற்காக என்ற விவரம் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.
