சுற்றி வளைத்த பொலிஸ்... வீட்டுக்குள் கண்ட காட்சி: தப்பி ஓடிய அவுஸ்திரேலியர்
இந்தோனேசியாவின் பாலி பிராந்தியத்தில் போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் அவுஸ்திரேலியர் ஒருவரை உள்ளூர் பொலிசாரும் சர்வதேச பொலிசாரும் தேடி வருகின்றனர்.
குறித்த அவுஸ்திரேலியர் பாலிக்கு $5 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களை இறக்குமதி செய்ததாகக் கூறப்படுகிறது. இவர் தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில், அவர் தங்கியிருந்த குடியிருப்பை சுற்றி வளைத்த பொலிசார், கண்ட காட்சி அதிர வைத்துள்ளது.
ஏப்ரல் 12ம் திகதி நடந்த சம்பவத்தில், குறித்த குடியிருப்பில் இருந்து 35 கிலோ மெத், 32 கிலோ கோகோயின், 800 எக்ஸ்டஸி மாத்திரைகள் மற்றும் 2.6 கிலோ மரிஜுவானா ஆகியவை கைப்பற்றியுள்ளனர்.
மட்டுமின்றி, பொலிசாரின் சோதனையின் போதே அந்த நபர் குடியிருப்பில் இருந்து தப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உள்ளூர் குடிமக்கள் மூவரை இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பொலிசார் தீக்கிரையாக்கியுள்ளனர். மேலும், மூன்று இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
மேலும், தப்பியோடிய அவுஸ்திரேலியர் காவல்துறை கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார் எனவும், அவருக்கு 32 வயதிருக்கலாம் எனவும் பாலி பிராந்திய பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து குறித்த நபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்படும் எனவும் பொலிஸ் தரப்பு உறுதியளித்துள்ளது.
உலகிலேயே கடுமையான போதைப்பொருள் சட்டங்கள் உள்ள நாடு இந்தோனேசியா.
நாட்டிற்குள் பெருமளவிலான போதைப் பொருட்களைக் கடத்திய குற்றவாளிகளுக்கு துப்பாக்கிச் சூடு மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்படும்.