தேனிலவுக்குச் சென்ற மணமகன் கொல்லப்பட்ட வழக்கு: நீடிக்கும் மர்மம்
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு புதுமணத்தம்பதி தேனிலவுக்குச் சென்ற நிலையில், மணமகன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் மர்மம் நீடிக்கிறது.
புதுமணத்தம்பதி மாயம்
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் (25) சென்ற மாதம் மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்தார்கள்.
மே மாதம் 23ஆம் திகதி தம்பதியர் திடீரென மாயமானார்கள். பொலிசாரின் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை ராஜாவின் உயிரற்ற உடல் Weisawdong நீர்வீழ்ச்சியின் அருகே அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
வழக்கில் அதிரடி திருப்பம்
தற்போது ராஜா கொலை வழக்கில் ராஜாவின் மனைவியான சோனம் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ராஜாவைக் கொல்ல சோனம் ஏற்பாடு செய்ததாக கூறப்படும் விஷால் சௌகான், மற்றும் ஆனந்த் குமார் ஆகியோரையும், சோனமுடைய காதலர் என கருதப்படும் ராஜ் சிங் குஷ்வாஹா என்பவரையும் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
நீடிக்கும் மர்மம்
இந்நிலையில், வழக்கில் பல சந்தேகங்கள் நீடிக்கின்றன. மேகாலயாவுக்கு தேனிலவுக்குச் சென்ற சோனம், மத்தியப்பிரதேசத்தில் உள்ள Ghazipur என்னுமிடத்தில் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.
அவர் மேகாலயாவிலிருந்து எப்படி வந்தார் என்பது தெரியவில்லை.
மேலும், சோனமை பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தான் கடத்தப்பட்டதாகவும், தான் யாரையும் கொலை செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இதற்கிடையில், தன் மகள் நிரபராதி, அவளால் தன் கணவரை கொலை செய்ய முடியாது, இரு குடும்பங்களின் சம்மதத்தின்பேரில்தான் இந்த திருமணம் நடந்தது.
அரசு அதிகாரிகள் பொய் சொல்கிறார்கள், ஆகவே CBI விசாரணை வேண்டும் என்று கூறியுள்ளார் சோனமுடைய தந்தையான தேவி சிங்.
ஆக மொத்தத்தில், ராஜா கொலை வழக்கு இன்னமும் மர்மமாகவே நீடிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |