வடகொரியாவில் பரவும் மர்மநோய்... நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தல்
வடகொரியாவில் நூற்றுக்கணக்கானோர் மர்ம நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியாவின் தெற்கு Hwanghae மாகாணத்தில், சுமார் 800 குடும்பங்கள் வயிற்றுப்போக்குடன் தொடர்புடைய ஒரு தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
வடகொரிய ஊடகங்கள், அது என்ன நோய் என்று குறிப்பிடாத நிலையில், அது காலரா அல்லது டைபாய்டாக இருக்கலாம் என தென் கொரிய அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
நோய்வாய்ப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுகாதார அதிகாரிகள் வடிகால்கள் மற்றும் குப்பைகள் குவிந்திருக்கும் இடங்களில் கிருமிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளார்கள்.
ஏற்கனவே கடுமையான உணவுத் தட்டுப்பாடு மற்றும் கோவிடால் வடகொரியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நோய்த்தொற்றுப் பரவல் அந்நாட்டிற்கு மேலும் அதிக அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.