தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலருக்கு ஆயுதம்: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
N Korea Condemns US Over 125m arms sale to S Korea: தென் கொரியாவிற்கு அமெரிக்கா ஆயுத விற்பனை செய்வதை வட கொரியா கடுமையாக கண்டித்துள்ளது.
அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
தென் கொரியாவிற்கு ஆயுத விற்பனை தொடர்பில் புதிதாக ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தங்கள் நாட்டிற்கு எதிரான நேரடி விரோதப் போக்கு என்று வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
வட கொரிய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான KCNA வாயிலாக வெளியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்காவின் இந்த செயலுக்கு வட கொரியா வெளியுறவு அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் நிலைமை மோசமானதாக அமைந்தால் உடனடியாகவும், சக்திவாய்ந்த முறையிலும் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
125 மில்லியன் டொலர் ராணுவ தளவாடங்களுக்கான ஒப்புதலை தென் கொரியாவிற்கு அமெரிக்கா அளித்ததை அடுத்து இந்த இராஜதந்திர மோதல் ஏற்பட்டுள்ளது.
தென் கொரியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் 103 'AIM-9X Sidewinder Block II' ஆகிய ஏவுகணைகளும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |