இதற்காக தான் நாங்கள் ஆயுதங்களை அதிகரிக்கிறோம்! கிம் ஜாங் உன் வெளிப்படை
அமெரிக்காவின் விரோத கொள்கைகள் மற்றும் தென் கொரியாவின் இராணுவ கட்டமைப்பை எதிர்கொள்ள வடகொரியாவுக்கு ஆயுத வளர்ச்சி அவசியம் என அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.
திங்கட்கிழமை பேசிய கிம் ஜாங் உன், வட கொரிய தற்பாதுகாப்பிற்காக மட்டும் தான் அதன் இராணுவ கட்டமைப்பை அதிகரிக்கிறது, போரை துவங்குவதற்கு அல்ல.
நாங்கள் யாருடனும் போார் செய்வது தொடர்பில் விவாதிக்கவில்லை. மாறாக, போரைத் தடுப்பதற்கும், தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பது குறித்து விவாதித்து வருகிறோம்.
வடகொரியா மீது எந்தவிதமான விரோத உணர்வும் இல்லை என்று அமெரிக்கா கூறுவதை, நம்புவது கடினம்.
தென் கொரியா அதன் இராணுவ கட்டமைப்பை பலப்படுத்த மேற்கொள்ளும் கட்டுப்பாடற்ற மற்றும் ஆபத்தான முயற்சிகள், கொரிய தீபகற்பத்தில் இராணுவ சமநிலையை அழித்து, இராணுவ உறுதியற்ற தன்மை மற்றும் ஆபத்தை அதிகரிக்கிறது என தெரிவித்துள்ளார்.