ஆண்டவன் மீது ஆணை... திரைப்பட பாணியில் பதவியேற்ற முதலமைச்சர் விஜய்
தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட விழாவில் ஆண்டவன் மீது ஆணையாக உறுதியேற்கிறேன் என்று விஜய் கூறியிருந்தது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டவன் மீது
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தவெக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் ஆண்டவன் மீது ஆணையாக என்று சொல்லியிருப்பது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

விஜய் மட்டுமல்லாது அடுத்து அமைச்சராக பதவியேற்ற என். ஆனந்தும் ஆண்டவன் மீது ஆணையாக பதவியேற்றுக்கொள்வதாக கூறியிருக்கிறார்.
பொதுவாக தமிழ்நாட்டில் மட்டுமின்றி, டெல்லியிலும் பதவியேற்கும் உறுப்பினர்கள் பலரும் உளமாற பதவியேற்கிறேன் என்று சொல்லியே பதவியேற்பார்கள்.
விஜய்க்கு ஆதரவு
ஆனால் விஜய், பதவியேற்கும்போது ஆண்டவன் மீது ஆணையாக என்று திரைப்பட பாணியில் உறுதியேற்றுள்ளார். மதவாத சக்திகள் உள்ளே வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் விஜய்க்கு ஆதரவு என்று இடதுசாரிகள் கூறியிருந்தனர்.
ஆனால், இடதுசாரி தலைவர்களுக்கு நன்றி சொல்ல சென்ற விஜய் கையில் சிவப்பு கயிறு நெற்றியில் திலகமிட்டு சென்றிருந்தார். அப்போதே பலரும் விஜய் குறித்து எச்சரிக்க தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |