ஆசிய கோப்பையை இந்தியாவிற்கு தர தயார் - ஆனால் ஒரு நிபந்தனை விதித்த நக்வி
ஆசிய கோப்பையை இந்தியாவிடம் வழங்க ACC தலைவர் மொஹ்சின் நக்வி நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.
கோப்பை வென்ற இந்தியா
2025 ஆசிய கோப்பை தொடரில், இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆனால், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை பெற மாட்டோம் என்பதில் இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் உறுதியாக இருந்தார்.
மொஹ்சின் நக்வி தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராகவும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார்.
அதேவேளையில், கோப்பையை நான் தான் வழங்குவேன் என்பதில் மொஹ்சின் நக்வியும் உறுதியாக இருந்தார்.
இதன் காரணமாக கோப்பையை இந்திய அணிக்கு வழங்காமல், தன்னுடன் நக்விஎடுத்து சென்று விட்டார்.
நக்வி விதித்துள்ள நிபந்தனை
இதன் காரணமாக கோப்பை இல்லாமல், இந்திய அணி வெற்றியை கொண்டாடியது. இது குறித்து ஐசிசியிடம் புகார் அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், கோப்பையை இந்திய அணியிடம் வழங்க நக்வி முன்வந்துள்ளதாகவும், அதேவேளையில் அதற்கு நிபந்தனை ஒன்றை விதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, மீண்டும் இதற்கு ஒரு விழா நடத்தினால் தான் கோப்பையை வழங்குவேன் என தெரிவித்துள்ளாராம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |