மீண்டும் களமிறங்கும் தமிழக வீரர் நடராஜன்! ஐபிஎல் தொடரில் விளையாடுவது உறுதி! உற்சாகத்தில் ரசிகர்கள்
தமிழக வீரர் நடராஜன் விரைவில் ஹைதராபாத் அணியுடன் இணைந்து ஐபிஎல்எலில் விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலிய தொடர்கள் நடராஜனுக்கு சிறப்பாகவே அமைந்தது. அதன்பின்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன் கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டார்.
இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அவர் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். இப்போது பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் மருத்துவர்களின் கண்காணிப்பில் மெல்ல தன்னுடைய பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார் நடராஜன்.
சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்தப் பேட்டியில் ஐபிஎல்லில் விளையாட பயிற்சி எடுத்து வருவதாக கூறினார். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அமீரகம் புறப்படுகிறது.
அதில் நடராஜனும் செல்வதாக அந்த அணியின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் காயத்தில் இருந்து மீண்ட நடராஜன் ஐபிஎல்லில் மீண்டும் விளையாடுவது உறுதியுள்ளது.
இந்த தகவலானது ரசிகர்களை மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது.