இனி நாடு முழுவதும் இந்த உணவுக்கு தடை: பாரம்பரிய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்த தென் கொரியா
தென் கொரியாவில் நாய் உணவு உட்கொள்ளும் பாரம்பரிய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க இருப்பதாக ஜனாதிபதி மூன் ஜே அறிவித்துள்ளார்.
தென் கொரியாவில் நாய் உணவு உட்கொள்ளும் பழக்கம் பாரம்பரிய நடைமுறையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி மூன் ஜே சர்வதேச சங்கடத்தைத் தவிர்க்க பாரம்பரிய நடைமுறை நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
தென் கொரியாவை பொறுத்தமட்டில் ஆண்டுக்கு ஒரு மில்லியன் நாய்கள் உணவுக்காக மட்டும் கொல்லப்படுகிறது. ஆனால் சமீப காலமாக தென் கொரியாவில் நாய் உணவு உட்கொள்வது சரிவடைந்து வருவதாகவே கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய இளையோர் சமூகம் நாய் உணவு மீது அதிக நாட்டம் கொண்டவர்கள் அல்ல எனவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தென் கொரிய பிரதமருடன் முன்னெடுக்கப்பட்ட வார இறுதி சந்திப்பில் ஜனாதிபதி மூன் ஜே, நாய் உணவுக்கு தடை விதிக்கும் காலம் வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தென் கொரியாவில் நாய்களை செல்ல பிராணிகளாக வளர்க்கும் மன நிலையும் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.
இதனையடுத்தே ஜனாதிபதி மூன் ஜே, முதல் முறையாக நாய் உணவுக்கு தடை விதிக்கும் முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நடைமுறை எப்போதிருந்து அமுலுக்கு கொண்டுவரப்படும் என்ற அறிவிப்புகள் வெளியாகவில்லை.