இந்த பிரச்சினையில் நேட்டோ தலையிட்டால் 3ம் உலகப் போர் வெடிக்கும்! ரஷ்ய எச்சரிக்கை
உக்ரைனுடனான எல்லை பிரச்சினையில் நோட்டோ தலையிட்டு அவர்களுக்கு ஆதரவாக ரஷ்யாவை எதிர்த்து மோதினால் 3ம் உலகப் போர் வெடிக்கும் உலகளாவிய பேரழிவு ஏற்படும் என ஓய்வு பெற்ற ரஷ்ய ஜெனரல் Evgeny Buzhinsky எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நோட்டோ உறுப்பினரான உக்ரைன், Crimea உடனான அதன் எல்லைக்கு அருகே ரஷ்ய படைகள் நெருங்க வருவதாக குற்றம்சாட்டியுள்ளது, மேலும் இதனால் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு Crimea-வை பிரித்து ரஷ்ய தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரஷ்யாவின் இந்த செயல்பாடு கடந்த ஆண்டு நடைபெற்றது போலவே சாதாரண இராணுவ பயிற்சி என ஓய்வு பெற்ற ரஷ்ய ஜெனரல் Evgeny Buzhinsky விளக்கமளித்துள்ளார்.
இதில் நோட்டோ தலையிட்டால் நிலைமை அமெரிக்க-ரஷ்ய படைகள் மோதலில் ஈடுபடும் அளவிற்கு மோசமாகும்.
இது உலகளாவிய பேரழவிற்கு வழவகுக்கும் என ஓய்வு பெற்ற ரஷ்ய ஜெனரல் Evgeny Buzhinsky எச்சரிக்கை விடுத்துள்ளார்.