கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சீரம்.., வீட்டிலேயே தயாரிக்கலாம்
பொதுவாக பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் இயற்கை சீரமை எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- ½ கப்
- ஜோஜோபா எண்ணெய்- ¼ கப்
- ரோஸ்மேரி எண்ணெய்- சிறிதளவு
- கற்றாழை ஜெல் - சிறிதளவு
எப்படி தயாரிப்பது?
முதலில் ரு சிறிய கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்துக் கொள்ளவும்.
பின்னர் இதனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்துக் நன்கு கலந்துகொள்ள வேண்டும்.

அடுத்து இதனை லேசாக சூடாக்கி ஆறியதும் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
தினமும் இந்த சீரத்தை சிறிதளவு கைகளில் ஊற்றிக் கொண்டு உச்சந்தலையில் முதல் நுனி வரை தேய்த்துக் கொள்ளவும்.
பின் ஒரு 10 நிமிடங்கள் உச்சந்தலையில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |