கருவளையம் நிரந்தரமாக நீங்க உதவும் இயற்கை கிரீம்: எப்படி தயாரிப்பது?
கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
அந்தவகையில், முகத்தின் அழகினை கெடுக்கும் கருவளையங்கள் நிரந்தரமாக நீங்க இந்த ஒரே ஒரு கிரீம் போதும்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு- 1
- பாதம் பொடி - 1 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி நன்கு துருவி கொள்ளவும்.
பின் துருவிய உருளை கிழங்கை வடிகட்டி கொண்டு அதன் சாறை மட்டும் வடித்து எடுத்துக்கொள்ளவும்.
வடிந்த சாறை ஒரு சின்ன பவுலில் மாற்றி அதில் பாதம் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்தால் கிரீம் ரெடி.
தினமும் இரவில் முகத்தை நன்கு சுத்தம் செய்து பின் இந்த கிரீமை முகத்தில் தடவி இரவு முழுவதும் முகத்தில் வைக்கவும்.
பின் மறுநாள் காலையில் முகத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்துக்கொள்ளலாம்.
இந்த கிரீமை தொடர்ந்து வாரம் ஒருமுறை பயன்படுத்தி வர கருவளையங்கள் மறைந்து முகம் பொலிவாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |