அதிகாரப்பூர்வமாக பெயரை மாற்றிய பசிபிக் தீவு தேசம்
நவூரு (Nauru) தனது பெயரை அதிகாரப்பூர்வமாக "நவோரோ" (Naoero) என மாற்றியது.
பசிபிக் தீவுகளில் அமைந்துள்ள சிறிய நாடான நவூரு, தனது பெயரை அதிகாரப்பூர்வமாக நவோரோ குடியரசு என மாற்றியுள்ளது. இந்த மாற்றம், நாட்டின் பாரம்பரிய மொழி மற்றும் உச்சரிப்புடன் பொருந்தும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், நவூரு தனது காலனித்துவ காலத்தின் அடையாளத்திலிருந்து விலகி, தாய்மொழி அடிப்படையிலான பெயருக்கு திரும்பியுள்ளது.
புதிய பெயர் “நவோரோ” (Naoero) என உச்சரிக்கப்படுகிறது. இதுவரை உலகளவில் “நவூரு” (Nauru) என அறியப்பட்ட இந்த நாடு, இனி NRO என்ற குறியீட்டில் சர்வதேச அளவில் பதிவு செய்யப்படும். மக்கள் இனி “dei-Naoero” என அழைக்கப்படுவார்கள்.
நவோரோ நாட்டின் ஜனாதிபதி டேவிட் அடேங் (David Adeang), “இந்த பெயர் மாற்றம் எங்கள் பாரம்பரியம், மொழி மற்றும் அடையாளத்தை மதிக்கும் முக்கியமான படியாகும்” என தெரிவித்துள்ளார்.
சுமார் 12,000 மக்கள் கொண்ட இந்த நாடு, உலகின் மூன்றாவது சிறிய நாடாகும். ஜேர்மனி மற்றும் அவுஸ்திரேலியாவின் காலனித்துவ ஆட்சிக்குப் பிறகு, 1968-ல் சுதந்திர குடியரசாக உருவானது.
1970-களில் பாஸ்பேட் சுரங்கம் மூலம் பெரும் செல்வம் ஈட்டிய இந்த நாடு, பின்னர் பொருளாதார சிக்கல்களை சந்தித்தது. தற்போது, காலநிலை மாற்றம் மற்றும் கடல் மட்ட உயர்வு காரணமாக ஆபத்தான நிலையை எதிர்கொள்கிறது.
இந்த பெயர் மாற்றம், தேசிய பெருமை மற்றும் அடையாளத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
ஐ.நா., அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, சீனா ஆகியவை ஏற்கனவே புதிய பெயரை அங்கீகரித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |