பாகிஸ்தான் மீது உக்கிரத் தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்த இந்தியக் கடற்படை... வெளிவரும் புதிய தகவல்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானுக்குள் உக்கிரத்தாக்குதலுக்கு ஏவுகணைகளுடன் இந்தியக் கடற்படை தயார் நிலையில் இருந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தயாராக இருந்தது
ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இந்தியக் கடற்படை தாக்குதலுக்கு தயாராக இருந்தது என்றே கூறப்படுகிறது. ஆனால் தாக்குதல் நடத்த உத்தரவு மட்டும் இறுதி வரை வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்த வேண்டிய இலக்குகள், துறைமுகம், பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட இந்தியக் கடற்படையால் குறிவைக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஒரு முழுமையான கடற்படைத் தாக்குதல் என்பது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போக்கை மாற்றிவிடக் கூடும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கராச்சி துறைமுகத்தில் உள்ள பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் உட்பட பாகிஸ்தானுக்குள் உள்ள இலக்குகளை பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலமாகவும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் குரூஸ் ஏவுகணைகளால் பாகிஸ்தானின் உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டிருக்கும் என்றே கூறப்படுகிறது.
போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களும் தாக்குதலுக்கு தயார் நிலையில் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் அதிகாரிகள் தரப்பில் இருந்து தாக்குதலுக்கான உத்தரவு அளிக்கப்படவில்லை என்றே தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |