கிட்டத்தட்ட பத்து லட்சம் புதிய புலம்பெயர்ந்தோரை எதிர்கொள்ளத் தயாராகும் ஒரு நாடு
அவுஸ்திரேலிய நிர்வாகம் அடுத்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 765,000 புதிய புலம்பெயர்ந்தோரை எதிர்கொள்ளத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 மில்லியனைத் தாண்டும்
புலம்பெயர் மக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதாகப் பலமுறை உறுதியளித்திருந்தபோதிலும், அவுஸ்திரேலிய நிர்வாகம் ஒரு பெரிய மக்கள்தொகைப் பெருக்கத்திற்குத் தயாராகி வருகிறது.

வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், நடப்பு நிதியாண்டில் 295,000 புலம்பெயர் மக்களையும்; அதைத் தொடர்ந்து 2026-27-இல் 245,000 புலம்பெயர் மக்களையும், 2027-28-இல் 225,000 புலம்பெயர் மக்களையும் அரசு எதிர்பார்ப்பதாகவே தெரிய வருகிறது.
லேபர் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, 2028-இல் நடைபெறவிருக்கும் அடுத்த தேர்தலுக்குள், மொத்த புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
2022/23 நிதியாண்டில் அவுஸ்திரேலியாவில் சாதனை அளவாக 518,000 புலபெயர் மக்கள் பதிவு செய்தனர். பெருந்தொற்றுக்குப் பிந்தைய இந்தக் கடும் அதிகரிப்பு, குடியிருப்புப் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு மீதான அழுத்தம் குறித்துப் பரவலான கவலையைத் தூண்டியது.
அரசாங்கம் அந்த வரலாற்று உச்ச அளவிலிருந்து எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தாலும், அவுஸ்திரேலியா தனது வரலாற்றிலேயே மிகவும் வலிமையான குடியேற்றத் திட்டங்களில் ஒன்றை தொடர்ந்து செயல்படுத்தும் என்பதை சமீபத்திய கணிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.
சமீபத்தில் வெளியாகியுள்ள இப்புள்ளிவிவரங்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் குறுகிய கால விசா வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட தற்காலிகப் புலம்பெயர் மக்களை உள்ளடக்கவில்லை.

மற்றொரு பெரும் சவால்
சமீப ஆண்டுகளில் பெருமளவில் அதிகரித்துள்ளதும், வாடகைச் சந்தைகள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதுமான ஒரு பிரிவினர் இவர்கள்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அல்பானீஸ் அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுக்க முயன்றுள்ளது. வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருக்கும் முக்கியத் தொழில்துறைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக,
அதிகாரிகள் மாணவர் விசாக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர், கடுமையான தகுதி விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர், மேலும் விண்ணப்பங்கள் மீதான ஆய்வையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆனால், மக்கள் தொகை பெருக்கம் மற்றொரு பெரும் சவாலான வீட்டு வசதிப் பிரச்சினையை மூட்டி விட்டுள்ளது. ஆல்பனீஸ் அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து, அவுஸ்திரேலியா சுமார் 500,000 முதல் 615,000 வரையிலான வீடுகளை வழங்கியுள்ளது.
இப்பட்ஜெட்டில், கழிவுநீர் வசதி, மின்சாரம் மற்றும் சாலைகள் உள்ளிட்ட வீட்டு வசதிகளுக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க, அரசாங்கம் 2 பில்லியன் டொலரைச் செலவிடத் திட்டமிட்டுள்ளது; இதன் மூலம் 65,000 புதிய குடியிருப்புகள் கூடுதலாக உருவாகும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |