மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில பாட்டி வைத்தியம்.
பொதுவாக பெண்களைப் பாடாய்படுத்தும் பிரச்னைகளில் மாதவிடாய் பிரச்னை ஒன்றாகும். நாட்கள் தள்ளிப் போவது, அதிகப்படியான உதிரப்போக்கு, உடல் சோர்வு அதிகவலி என மாதவிடாய் பிரச்னைகளால் பல பெண்கள் அவதிப்படுகிறார்கள்.
நிறைய பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளுக்கு எத்தனை மருந்து, மாத்திரைகள் மாற்றிப் பார்த்தாலும், ஏன் மருத்துவர்களையே மாற்றிப் பார்த்தாலும் கூட அவர்கள் எதிர்ப்பார்க்கும் பயன் அடைவதில்லை.
சில நேரங்களில் இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். எனவே இவற்றை தடுக்க ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.
- தினமும் காலை அருகம்புல்லை அரைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும். மற்றும் வயிறு உபாதைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கும் இது நல்ல தீர்வளிக்கும்.
- அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
- ஆலமர இலைகளை பொடி செய்து வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குப் பிரச்னையில் இருந்து நல்ல தீர்வுக் கிடைக்கும்.
- எள்ளைத் தண்ணீரில் போட்டு ஊற வைத்து. மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு காலத்தில் உண்டாகும் பிரச்சனைகள் குறையும்.
-
கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.
-
செம்பருத்திப் பூக்களை அரைத்து அதோடு எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு ஒழுங்காகும். செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.
- சோம்பு, மாவிலங்கப்பட்டை, மிளகு மூன்றையும் சம அளவுக்குக் காய்ச்சி 100 மில்லி அளவுக்குக் குடித்தால், மாதவிலக்குப் பிரச்னைகள் விரைவில் சரியாகும்.