நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: நிலநடுக்கம் காரணம் அல்ல., அமெரிக்கா வெளியிட்ட திடுக்கிடும் காரணம்
Nepal Floods caused by Glacial Collapse: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கான காரணத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(USGS) தெளிவுபடுத்தியுள்ளது.
நேபாள வெள்ளப்பெருக்கு
திபெத் எல்லையில் இருந்து வந்த திடீர் மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு வடக்கு நேபாள பகுதிகளை தீவிரமாக உலுக்கியுள்ளது.
போட்டே கோஷி(Bhote Koshi) நதியில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்த வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் இதுவரை குறைந்தது 157 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 142 இந்தியர்கள் உட்பட 341 வெளிநாட்டினரை சேர்த்து மொத்தம் 400க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
நேபாளத்தில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய வெள்ளப்பெருக்கிற்கு ஆரம்பத்தில் நிலநடுக்கமே காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.
ஆனால் இந்த வெள்ளப்பெருக்கு நேபாள-சீன எல்லையில் பூமிக்கடியில் பதிவான நிலநடுக்கத்தால் அல்ல. மாறாக பனிப்பாறை சரிவு(glacial collapse) மற்றும் குப்பைகள் பெருக்கெடுத்ததால்(debris flow) ஏற்பட்ட சம்பவம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(USGS) தெளிவுபடுத்தியுள்ளது.
ஆரம்ப கட்டத்தில், காலை 8.37 மணியளவில் காத்மாண்டுவிற்கு வடக்கே 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற முடிவுகளை தானியங்கி அமைப்புகள் பதிவு செய்தன.

ஆனால் பின்னர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிளாண்ட் லேப்ஸ் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் நடத்தப்பட்ட கூடுதல் ஆய்வுகளில், பனி மற்றும் பாறைகளில் ஏற்பட்ட சரிவே லெண்டே நதியில் பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது.
இந்த வெள்ளப்பெருக்கே போட்டே கோஷி நதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி ரசுவே, நுவாகோட் மற்றும் தாதிங் ஆகிய மாவட்டங்களை உலுக்கியுள்ளது.
இந்த பனிச்சரிவு நிலநடுக்கத்திற்கு நிகரான 5.2 ரிக்டர் அளவிலான நில அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
மேலும் இது டெக்டோனிக் தகடுகளின் நகர்வு அல்ல என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |