நேபாளத்தின் முதல் பெண்மணி காலமானார்
நேபாள முதல் பெண்மணியும் பிரதமருமான புஷ்பா கமல் தஹாலின் மனைவி சீதா தஹல் இன்று (புதன்கிழமை) காலமானார்.
காத்மாண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
சீதா தஹால் ஒரு அரிய நரம்பியல் கோளாறான progressive supranuclear palsy (PSP) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை கூறியது. அவர் காலை 8:33 மணிக்கு இறந்ததாக நார்விக் சர்வதேச மருத்துவமனையின் அறிக்கை தெரிவிக்கிறது.
Twitter / @khatri__S
progressive supranuclear palsy (PSP) என்பது ஒரு அரிய மூளைக் கோளாறு ஆகும். இது இயக்கம், நடை மற்றும் கண்பார்வை பாதிக்கிறது. சிந்தனை மற்றும் உடல் இயக்கத்தை கட்டுப்படுத்தும் மூளையில் உள்ள நரம்பு செல்கள் சேதமடையும் போது இது நிகழ்கிறது.
சீதா தஹாலுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் பார்கின்சன் நோய் இருந்தது. PSP பார்கின்சன் நோயிலிருந்து வேறுபட்டது. தற்போது, PSP க்கு பயனுள்ள சிகிச்சை எதுவும் இல்லை, ஆனால் சில அறிகுறிகளை மருந்து அல்லது பிற சிகிச்சைகள் மூலம் நிர்வகிக்கலாம்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சீதா தஹாலின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக இந்தியாவிலும், நேபாளத்திலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
மருத்துவர்களின் கூற்றுப்படி, PSP என்பது ஒரு அரிய நோய் மற்றும் 100,000 பேரில் 5-6 பேருக்கு மட்டுமே காணப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |