பல உயிர்களை காப்பாற்றி ஹீரோவான நேபாள இளைஞர்: 2 ஆண்டுகளுக்கு பின் சடலமாக..ஒப்படைத்த ஹமாஸ்
நேபாள மாணவரான பிபின் ஜோஷியை சடலமாக ஹமாஸ் ஒப்படைத்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலரது உயிர்களை காப்பாற்றிய மாணவர்
ஹமாஸ் தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, நேபாளத்தில் இருந்து இஸ்ரேல் சென்ற ஆராய்ச்சி மாணவர் பிபின் ஜோஷி (Bipin Joshi).
இவர் காஸா எல்லைக்கு அருகில் உள்ள கிப்புட்ஸ் அலிமிம் என்ற இடத்தில் விவசாயம் குறித்த ஆராய்ச்சி படிப்பிற்காக, 17 நேபாள மாணவர்களில் ஒருவராக அங்கு சென்றிருந்தார்.
அதன் பின்னர் ஹமாஸ் தாக்குதலில் இருந்து பலரது உயிர்களை ஜோஷி துணிச்சலுடன் செயல்பட்டு காப்பாற்றினார். துரதிர்ஷ்டவசமாக அவரை ஹமாஸ் படையினர் பிடித்துச் சென்றனர்.
அவர்களது பிடியில் சிக்கியிருந்த பிணைக்கைதிகளில் இஸ்ரேலியர் அல்லாத ஒரே நபர் ஜோஷிதான். மேலும் 2023க்கு பிறகு அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காத போதிலும், அவர் உயிருடன் இருக்கிறார் என்று நம்பப்பட்டது.
அதற்கு சான்றாக, சமீபத்தில் இஸ்ரேலிய இராணுவம் காஸாவில் இருந்து அவர் உயிருடன் இருந்ததைக் காட்டும் வீடியோவை வெளியிட்டது.
சடலமாக ஜோஷி
இந்த நிலையில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 4 பேரின் சடலங்களை இஸ்ரேலிய அதிகாரிகளிடம் ஹமாஸ் ஒப்படைத்தது. அதில் ஜோஷியின் சடலமும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இஸ்ரேலிய அதிகாரிகள் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த மரபணு பரிசோதனை செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜோஷியின் உடலை நேபாள நாட்டிற்கு தூதரகத்தின் மூலம் அனுப்பும் என்றும், அதற்கு முன் இஸ்ரேல் அரசு முறைப்படி இறுதிச் சடங்குகளை நடத்தும் என்றும் இஸ்ரேலுக்கான நேபாள தூதர் தனபிரசாத் பண்டிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
These are the 4 hostages who were murdered and who will be returned to Israel from Gaza
— Documenting Israel (@DocumentIsrael) October 13, 2025
Yossi Sharabi, Bipin Joshi, Daniel Peretz, and Guy Iluz
May their memories be for a blessing pic.twitter.com/YkaDqRpXXu
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |