இது தாங்க முடியாத சோகம்! பிணைக்கைதிகள் தவறுதலாக கொல்லப்பட்டதற்கு வருந்திய நெதன்யாகு
இஸ்ரேல் இராணுவம் 3 பிணைக்கைதிகளை தவறுதலாக சுட்டுக் கொன்றதற்கு பிரதமர் நெதன்யாகு வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிணைக்கைதிகள் பலி
வடக்கு காசா பகுதியில் பிணைக்கைதிகள் மூவரை இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
தங்கள் வீரர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால் தவறுதலாக அவர்களை கொன்றதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்தது.
Reuters
பலியான மூன்று நபர்களும் Shejaiya பகுதியில் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது படைகளை நோக்கி வந்துள்ளனர்.
அதன் காரணமாகவே பாதுகாப்பு கருதி தங்கள் வீரர்கள் தாக்குதல் நடத்தியதாக IDF செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி (Daniel Hagari) தெரிவித்தார்.
நெதன்யாகு வருத்தம்
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'இது தாங்க முடியாத சோகம். இன்று மாலை இஸ்ரேல் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்த கடினமான நேரத்தில் துயரப்படும் அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |