வெளிப்படையாக அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு முழு ஆதரவுடன் ஆயுதங்களும் வழங்கிவரும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர்
காஸாவில் போர் முடிவுக்கு வந்தவுடன் பாலஸ்தீன அரசு நிறுவப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை தாம் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
@reuters
ஊடக சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், ஹமாஸ் படைகள் மீதான முழு வெற்றியை எட்டும் வரையில் இந்த போர் தொடரும் என்றார். ஹமாஸ் படைகளை மொத்தமாக ஒழித்து, இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்டுவர பல மாதங்களாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஸாவில் இதுவரையில் இஸ்ரேலிய தாக்குதலுக்கு 25,000 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 85 சதவிகித மக்கள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில், தனது தாக்குதலைக் கட்டுப்படுத்தவும், போர் தொடர்பில் அர்த்தமுள்ள பேச்சுக்களில் ஈடுபடவும் கடுமையான அழுத்தத்தை இஸ்ரேல் அரசாங்கம் எதிர்கொண்டு வருகிறது.
மேலும், அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் பல, இரு நாடுகள் கொள்கையை அமுலுக்கு கொண்டுவர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகின்றன. இந்த நிலையிலேயே வியாழக்கிழமை ஊடக சந்திப்பில் பிரதமர் நெதன்யாகு தெரிவிக்கையில்,
செல்வாக்கு செலுத்த முயன்றுள்ளது
ஜோர்தான் ஆற்றின் மேற்கே உள்ள அனைத்து நிலப்பரப்பிலும் இஸ்ரேல் பாதுகாப்புக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும், இதில் எதிர்கால பாலஸ்தீனிய அரசின் எல்லையும் அடங்கும் என்றார்.
@reuters
இந்த உண்மையை அமெரிக்காவிடம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதியை பாலஸ்தீன எதிர்ப்புக்கு பயன்படுத்தியுள்ள நெதன்யாகுவின் கருத்து வியப்பளிக்கவில்லை என்றே கூறுகின்றனர்.
இருப்பினும் காஸா மீதான இஸ்ரேலின் கடும்போக்கு நடவடிக்கைகள் மேற்கத்திய நாடுகளை நடவடிக்கை எடுக்க தூண்டியுள்ளதாகவே கூறப்படுகிறது. போரின் தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேல் ராணுவக் கொள்கையில் செல்வாக்கு செலுத்த முயன்றுள்ளது அமெரிக்கா.
இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படாமல் பாதுகாக்க முடியும் என்றும் அமெரிக்கா நம்பியுள்ளது. ஆனால் நெதன்யாகு அதற்கான வாய்ப்பை உருவாக்கவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும், சுமார் ஒரு மாத காலம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமரையும் தொடர்புகொள்ள மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |