நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்! காஸாவை முழுமையாக கைப்பற்றுவோம் - அடித்துக்கூறிய நெதன்யாகு
காஸா முழுவதையும் கட்டுக்குள் கொண்டுவருவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.
போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்
2023ஆம் ஆண்டு முதல் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போரை தீவிரப்படுத்தி வருகிறது. இதுவரை இஸ்ரேலின் தாக்குதலில் 60,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களில், காஸாவில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று திடீரென பாலத்தீனத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொண்டு செல்லும் ட்ராக்குகளை இஸ்ரேல் அனுமதித்தது.
காஸா பகுதி முழுவதையும்
ஆனால், ஹமாஸை முற்றிலும் ஒழிக்க முடியாமல் திண்டாடும் இஸ்ரேல், காஸா பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உள்ளதாக பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், "ஹமாஸுடன் சண்டை தீவிரமாக இருக்கிறது. நாங்கள் முன்னேறி வருகிறோம். விரைவில் காஸா முழுவதையும் கட்டுக்குள் கொண்டு வருவோம். இதில் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். எங்கள் வெற்றியை தடுக்க முடியாத வகையில் நாங்கள் செயல்படுவோம்" என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ வெளியாகி பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |