ஈரான் கற்பனை செய்யமுடியாத பதிலடியை எதிர்கொள்ளும்: நேதன்யாகு எச்சரிக்கை
ஈரான் இஸ்ரேலை தாக்க முயன்றால் அவர்கள் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு கடுமையான பதிலடியை சந்திக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எச்சரித்துள்ளார்.
தெற்கு இஸ்ரேலில் நடைபெற்ற இராணுவ அதிகாரிகள் பட்டமளிப்பு விழாவில் பேசிய நேதன்யாகு, “ஈரான் ஏதேனும் தவறு செய்து இஸ்ரேலை தாக்கினால், அவர்கள் கற்பனைக்குப் எட்டாத பதிலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எங்கள் நாடு எந்த சூழ்நிலைக்கும் தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், இனி ‘தடுப்பு காலம்’ முடிந்துவிட்டதாகவும் அவர் வலியுறுத்தினார்.
“நீங்கள் காட்டுக்குள் வராவிட்டால், காடு உங்களைத் தேடி வரும்” என்ற உவமையால், ஈரானின் அச்சுறுத்தல்களை தடுக்க இஸ்ரேல் முன்வரும் என்பதை அவர் விளக்கினார்.

இந்த எச்சரிக்கை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எச்சரிக்கை வெளியிட்டதையடுத்து வந்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
நேதன்யாகுவின் உரை, இஸ்ரேல் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த எந்த அளவுக்கும் செல்லத் தயார் என்பதை வெளிப்படுத்துகிறது.
ஈரான் தனது அணு திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், இஸ்ரேல்-அமெரிக்க கூட்டணி அதனை எதிர்கொள்ளும் வகையில் தீவிரமாக செயல்பட்டுவருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |