மார்கெட்டுக்கு தனி ஆளாக காய்கறி வாங்க வந்த பிரதமர்! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ
நெதர்லாந்தில் பிரதமர் எளிமையாக மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
நெதர்லாந்து நாட்டில் வசித்து வருபவர் கணேஷ். இவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர். இவர் அந்த நாட்டில் உணவு விடுதி ஒன்றை நடத்தி வருகின்றார். அது மட்டும் இல்லாமல் பகுதி நேரமாய் யூடியூப் பக்கத்தில் அவரின் அன்றாட நிகழ்வுகளை ஒரு வீடியோவாக பதிவு செய்வது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் ஒரு கடைக்கு வீடியோ எடுக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சூப்பர் மார்க்கெட்டில் அந்நாட்டு பிரதமர் ருட்டேவை பார்த்துள்ளார்.
அவர் சாதாரண குடிமகன் போல எளிமையாக எந்த வித பந்தாவும் இல்லாமல் தனி ஆளாக நடந்து சென்றுள்ளார். அப்போது கணேஷ் அவரிடம் சாதாரண மக்களை பேட்டி எடுப்பது போல எடுத்துள்ளார்.
பாதுகாப்புக்கு ஒருவர் கூட இல்லாமல் எளிமையாக சூப்பர் மார்கெட்டில் பொருட்களை வாங்கி அதைத் தானே சுமந்து வரும்
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) October 9, 2021
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் பிரதமர் மார்க் ருட்டே அவர்கள்...
# நெதர்லாந்து நாட்டில் வேலை செய்யும் தமிழர் கணேஷ் pic.twitter.com/sBCJCO81wk
முதலில் பேச தயங்கிய ருட் அதன் பிறகு நன்றாக பேச தொடங்கியுள்ளார். அதில் பிரதமர் நான் அவசரமாக காய்கறி வாங்கி செல்கிறேன் என்று சிரித்து கொண்டே கூறியுள்ளார்.
அதன் பிறகு கணேஷ் தன்னை இந்தியன் என்று அறிமுகப்படுத்தி பேச தொடங்குகிறார். எனக்கு இந்தியா ரொம்ப பிடிக்கும் என்று சில நேரம் அவருடன் பேசிவிட்டு அங்கிருந்து கடந்து செல்கின்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.