நேட்டோ மாநாடு நடைபெற உள்ள ஐரோப்பிய நாடு ஒன்றின் பிரதமர் திடீர் ராஜினாமா
நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூஃப் தனது பிரதமர் ராஜினாமா செய்ய உள்ளார்.
அரசுக்கான ஆதரவை விலக்கிய PVV
68 வயதான டிக் ஸ்கூஃப்(Dick Schoof), கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் புகலிட கோரிக்கையாளர்களை அனுமதிக்கும் கொள்கையில் தங்களுக்கு முரண்பாடு இருப்பதாக கூறி, அரசின் முக்கிய கட்சியான சுதந்திரத்திற்கான கட்சி(PVV) தங்களது ஆதரவை விலக்கி கொண்டுள்ளது.
வைல்டர்ஸ்ஸின் புகலிட திட்டத்தில், புகலிடம் கோருவோருக்கான எல்லை மூடல்கள், மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களை நாடு கடத்துதல் ஆகியவை அடங்கும்.

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன?
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் கீர்ட் வைல்டர்ஸ், "எங்கள் புகலிடத் திட்டங்களுக்கு எந்த கையொப்பமும் இல்லை. PVV கூட்டணியை விட்டு வெளியேறுகிறது," என தெரிவித்துள்ளார்.
Geen handtekening voor onze asielplannen.
— Geert Wilders (@geertwilderspvv) June 3, 2025
Geen aanpassing Hoofdlijnenakkoord.
PVV verlaat de coalitie.
மேலும், பிவிவி அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து விலக்கிக் கொள்வதாகவும், இதற்கு இனி நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றும் பிரதமரிடம் தெரிவித்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
பிரதமர் ராஜினாமா
இதனையடுத்து, நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூஃப் தனது பிரதமர் ராஜினாமா செய்ய உள்ளார்.
அடுத்த தேர்தல் மூலம், புதிய அரசு பதவி ஏற்கும் வரை அரசின் தற்காலிக பொறுப்பாளராக டிக் ஸ்கூஃப் இருக்க உள்ளார்.
மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை தொடர வாய்ப்பில்லை என்ற நிலை வந்தால், தேர்தல் நடத்தப்படும்.
ஜூன் மாத இறுதியில், நெதர்லாந்தில் நடைபெற உள்ள நேட்டோ மாநாட்டிற்கு உலக தலைவர்கள் வர உள்ள நிலையில், நெதர்லாந்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |