பொதுமக்களை கொல்ல உத்தரவிடவே இல்லை... ஹமாஸ் தலைவர்: ஊடகவியலாளர் கேள்வியால் கோபம்
ஹமாஸ் தலைவர் ஒருவர் ஊடகவியலாளர்களை சந்தித்த நிலையில், இஸ்ரேலுக்குள் ஹமாஸ் ஊடுருவியபோது, பொதுமக்களைக் கொல்ல உத்தரவிடப்படவே இல்லை என்று கூறினார்.
பொதுமக்களை கொல்ல உத்தரவிடவே இல்லை
ஹமாஸ் செய்தித்தொடர்பாளரும், காசாவின் துணை வெளியுறவு அமைச்சருமான Ghazi Hamad ஊடகவியலாளர்களை சந்தித்தார்.
BBC
அப்போது, பொதுமக்களைக் கொல்லும் நோக்கமோ, முடிவோ எங்களுக்கு அப்போது இல்லை என்று கூறியுள்ளார் Ghazi Hamad.
ஊடகவியலாளர் கேள்வியால் கோபம்
அக்டோபர் 7ஆம் திகதி, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த 260 பேரையும் படுகொலை செய்தனர்.
அது குறித்து பிபிசி ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, அந்த இடம் மிகவும் பெரியதாக இருந்தது, ஆகவே அங்கு கைகலப்புகளும் மோதல்களும் உருவாகின என்று கூறினார் Ghazi Hamad.
மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் வீடுகளுக்குள் நுழைந்து மக்களைக் கொன்றது கைகலப்பு அல்லவே என்றார் ஊடகவியலாளர்.
அதற்கு, அந்த நேரத்தில், பொதுமக்களைக் கொல்லும் நோக்கமோ, முடிவோ எங்களுக்கு இல்லை என்பதை என்னால் கூறமுடியும் என்று கூறியுள்ளார் Ghazi Hamad.
அவரது பதிலால் திருப்தியடையாக பிபிசி ஊடகவியலாளர் ஒருவர், அப்படியானால், எதனால் ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்தபோது பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், அதை உங்களால் நியாயப்படுத்தமுடியுமா என்று கேட்க, பதில் கூறமுடியாமல் ஸ்தம்பித்துப்போன Ghazi Hamad, தனது சட்டையில் பொருத்தியிருந்த மைக்கை கழற்றி தரையில் வீசிவிட்டு, இந்த பேட்டியை நிறுத்த விரும்புகிறேன் என்று கூறிவிட்டாராம்.
Al-Monitor
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |