காபூலில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரருக்கு பிறந்த அழகான பெண் குழந்தை! மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் உயிரை தியாகம் செய்த அமெரிக்க வீரருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது குறித்து அவரது மனைவி உருக்கமான பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு கடந்த மாதம் 26ஆம் திகதி காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்தது.
அப்போது அமெரிக்க ராணுவ படை கடைசி கட்ட மீட்பு பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது அவர்களை குறி வைத்து இந்த கொடூர தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக கூறப்பட்டது.
இதில் அப்பாவி மக்கள் சுமார் 190 பேர் பலியாகினர். அதோடு 13 அமெரிக்க வீரர்களும் இந்த தாக்குதலில் உயிர் தியாகம் செய்தனர். இந்த தாக்குதலில் பலியான வீரர்களுள் ஒருவர் அமெரிக்காவை சேர்ந்த 20 வயது மரைன் வீரர் ரைலி மெக்குலம்.
இவர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த போது அவரது மனைவி கர்ப்பமாக இருந்துள்ளார். அவரது கணவர் உயிரிழந்த செய்தியை கேட்ட ஜியென்னா துடிதுடித்து போனார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிறந்த குழந்தைக்கு தனது கணவரது பெயரான லேவி ரைலி ரோஸ் மெக்குலம் என்று புதிய பெயரை சூட்டியுள்ளார். குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு அதோடு அப்பாவின் பெயரை நீ சுமந்து செல்வாய் மகளே.. அவருக்கு இனி மரணம் இல்லை என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
On September 13th, 2021, widow Jiennah Crayton gave birth to Levi Rylee Rose McCollum. Her late father, Rylee J McCollum, was a Marine who died on August 26th during the Afghanistan airport attack. https://t.co/DHriFPD4E8 pic.twitter.com/57NXpmIwh3
— Good Morning America (@GMA) September 16, 2021
அந்த அழகான குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.