ஆப்கானில் தலிபான்களை குறிவைத்து 2வது நாளாக வெடிகுண்டு தாக்குதல்! ISIS-K வேலையா?
ISIS-K-வின் கோட்டையான ஐலாலாபாத்தில் 2வது நாளாக தலிபான்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐலாலாபாத்தில் நேற்று இரண்டு இடங்களில் தலிபான்களை குறிவதை்து தாக்குதல் நடத்தப்பட்ட இன்று நகரில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் குண்டு வெடித்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நங்கர்ஹார் மாகாணத்தின் கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட குண்டு வெடிப்பில் பொதுமக்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் தலிபான் போராளி ஒருவரும் காயமடைந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
தலிபான் எல்லை பொலிஸ் வாகனத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சனிக்கிழமை, ஜலாலாபாத்தில் நடந்த கார் குண்டு வெடிப்பில் இரண்டு தலிபான் போராளிகள் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 19 பேர் காயமடைந்தனர்.
ஜலாலாபாத் ISIS-K-வின் கோட்டையாக இருப்பதால், அவர்கள் சந்தேக நபர்கள் பட்டியலில் உள்ளனர் என தலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.