பெற்ற குழந்தையை சூட்கேசில் வைத்து மண்ணில் உயிருடன் புதைத்த தாயார்! 24 மணி நேரம் கழித்து தோண்டிய போது கண்ட அதிசய காட்சி
தென்னாப்பிரிக்காவில் பெற்றெடுத்த பெண் குழந்தையை சூட்கேசுக்குள் உயிரோடு வைத்து தாய் மண்ணுக்குள் புதைத்த நிலையில் 24 மணி நேரம் கழித்து குழந்தை உயிரோடு மீட்கப்பட்டுள்ள அதிசய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் Tsomo நகரை சேர்ந்தவர் 34 வயதான லிண்டிஸ்வா நடாலோ. இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் அவருடன் குழந்தை இல்லாமல் இருந்தது, இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து பொலிசாரை நாடினர்.
அங்கு அவர்கள் அளித்த புகாரில், லிண்டிஸ்வா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார், ஆனால் தற்போது அவர் வயிற்றில் குழந்தை இருப்பது போல தெரியவில்லை என கூறினர். இதையடுத்து பொலிசார் அவர் வீட்டுக்கு வந்த விசாரித்த போது சரியாக அவர் பதில் சொல்லவில்லை.
பின்னர் அருகில் இருந்த புற்கள் மற்றும் மணல்கள் நிறைந்த பகுதியை பொலிசார் பார்த்த போது அங்கு கல்லறை போல கட்டப்பட்டு மணல் நிரப்பி இருந்தது. அதை பொலிசார் தோண்டிய போது உள்ளே சூட்கேஸ் ஒன்று இருந்தது.
அதை திறந்த போது அதிகாரிகள் பேரதிர்ச்சி அடைந்தனர், காரணம் அதன் உள்ளே போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில் ஒரு குழந்தை உயிருடன் இருப்பதைக் கண்டனர். அதன்படி குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டு 24 மணி நேரம் ஆகியும் அதிர்ஷ்டவசமாக உயிருடன் இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இது குறித்த விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின. அதாவது, லிண்டிஸ்வா கர்ப்பமாக இருக்கும் போது பலமுறை கருவை கலைக்க முயன்றும் அது முடியவில்லை. இதையடுத்தே குழந்தையை உயிருடன் புதைத்தது தெரியவந்தது.
இந்த நிலையில் குழந்தையை கொல்ல முயன்றதாக லிண்டிஸ்வா மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.