ரசிகர் பலம் கொண்ட பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டன் நியமனம் - யார் தெரியுமா?
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டன் யார் என்பதை அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கும் நிலையில் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு தலா 5 அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் ஏற்கனவே பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் நடப்பாண்டு புதிதாக இணைந்துள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்டு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் பஞ்சாப் அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்து வந்தது.
இந்நிலையில் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் அணியின் விளையாடி வரும் மயங்க் அகர்வால் அனுபவம் நிறைந்த வீரராக இருப்பார் என்பதால் இம்முறை பஞ்சாப் அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என அந்த அணி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.