ஒரே மாதத்தில் உலகம் முழுவதும் 52 சதவிகிதம் புதிதாக அதிகரித்த தொற்று
கடந்த நான்கு வாரங்களில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக கொரோனா தொற்று 52 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிதாக 850,000 பேர்கள்
இந்த நான்கு வாரங்களில் புதிதாக பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை என்பது 850,000 என்றே கூறப்படுகிறது. ஆனால் முந்தைய 28 நாள் காலத்துடன் ஒப்பிடுகையில் புதிய இறப்புகளின் எண்ணிக்கை 8 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 3,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 17ம் திகதி வரையில், உலகம் முழுவதும் 7 மில்லியன் மக்கள் கொரோனா பாதிப்பால் இதுவரை இறந்துள்ளதாகவும், மொத்தம் 772 மில்லியன் பேர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், புதிதாக 118,000 பேர்கள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 1600 பேர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்லது.
குளிர்காலத்தின் தொடக்கம்
டிசம்பர் 18ம் திகதி கொரோனா தொற்றின் JN.1 என்ற புதிய மாறுபாடு அடையாளம் காணப்பட்டது. தற்போது இதன் தாக்கம் உலக அளவில் அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும் உலகின் பல நாடுகளில் குளிர்காலத்தின் தொடக்கம் என்பதால் JN.1 கொரோனா தொற்றால் சுவாச நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இருப்பினும், தற்போதுள்ள தடுப்பூசிகள் போதுமானது என்றே உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |