அச்சுறுத்தும் புதிய கொரோனா மாறுபாடு: இஸ்ரேல் வெளியிட்ட புதிய தகவல்
தென்னாபிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்டகொரோனா மாறுபாடானது தற்போது இஸ்ரேலிலும் பரவியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய புதிய மாறுபாட்டிற்கு பி.1.1.529 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். அண்மையில் ஆபிரிக்காவின் மலாவி நாட்டிலிருந்து இஸ்ரேல் வந்த பயணி ஒருவரிடம் இந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வந்த வேறு இருவருக்கும் இந்த தொற்றின் தாக்கம் இருப்பது உறுதியாகியுள்ளது. மூவருமே தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர். மூவருமே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
உலக அளவில் இஸ்ரேல் தன் நாட்டு மக்களுக்கு மிக வேகமாக தடுப்பூசி செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 90 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலில் 57 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் இஸ்ரேலில் தற்போது மூன்று பேருக்கு தென்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா தொற்று பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.