550 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ள நபரின் புதிய ஆசை
உயிரணு தானம் மூலம் 550 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ள ஒருவருக்கு இன்னும் ஒரு ஆசை உள்ளதாம்.
550 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ள நபர்
நெதர்லாந்து நாட்டவரான ஜோனதன் (Jonathan Jacob Meijer, 41) உயிரணு தானம் செய்வபர். இதுவரை 550 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளார் அவர்.
அவரிடம் உயிரணு தானம் பெற்றதன் மூலம் பிறந்த குழந்தைகளில் 375 நெதர்லாந்திலும், 80 குழந்தைகள் ஜேர்மனியிலும், 35 குழந்தைகள் பெல்ஜியம் நாட்டிலும், நான்கு குழந்தைகள் அர்ஜெண்டினாவிலும், இரண்டு குழந்தைகள் அவுஸ்திரேலியாவிலும் வாழ்கின்றன.
Image: CEN
ஜோனதனுக்கு இன்னும் ஒரு ஆசை உள்ளதாம்.
ஒருவர் அதிகபட்சம் 12 தாய்மார்களுக்கு உயிரணு தானம் செய்யலாம். 25 பிள்ளைகளுக்கு மட்டுமே தந்தையாகலாம் என விதி உள்ளது.
ஜோனதனோ, இதுவரை 550 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளதாக கருதப்படுகிறது. ஆகவே, இனி உயிரணு தானம் செய்ய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Image: Hollandse Hoogte/REX/Shutterstock
தடையை மீறி உயிரணு தானம் செய்தால், ஜோனதனுக்கு 88,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜோனதனுக்கு புதிதாக ஒரு ஆசை உருவாகியுள்ளது. ஆம், அவர் திருமணம் செய்து தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்க விரும்புகிறாராம்.
Image: CEN
தனக்கென ஐந்து குழந்தைகள் வேண்டும் என்கிறார் ஜோனதன்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |