பிரித்தானியாவில் தடுப்பூசியை எதிர்க்கக்கூடிய புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!
கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் மரபணுக்கள் மாறிய புதிய பிறழ்வு ஒன்றை பிரித்தானியா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது தடுப்பூசியை எதிர்க்கக்கூடியதாக இருக்கும் என்று I செய்தித்தாள் தெரிவித்திருக்கிறது.
பொது சுகாதார இங்கிலாந்து (PHE) அளித்த தகவலின் படி, E484K உடன் டெல்டாவின் 19 நோய்த்தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டது, இங்கிலாந்தில் 17 தொற்றுகளும் ஸ்காட்லாந்தில் இரண்டு தொற்றுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய பிறழ்வை 'விசாரணையின் கீழ் உள்ள சிக்னல்' என்று பொது சுகாதார இங்கிலாந்து (PHE) வகைப்படுத்தியுள்ளது,.
தடுப்பூசி எதிர்க்கக்கூடிய அதன் பண்புகளால் இந்த பிறழ்வு 'Eeek' என்று அழைக்கப்படுகிறது என I செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இந்த பிறழ்வு ‘potentially antigenically significant’, அதாவது இது கொரோனா வைரஸை தற்போதுள்ள தடுப்பூசிகளை மேலும் எதிர்க்க வைக்கும் என PHE கூறுகிறது.
ஆனால் இது தடுப்பூசிகளை பயனற்றதாக மாற்றும் என பரிந்துரை ஏதுவும் இல்லை.
மேலும், இந்த பிறழ்வு விசாரணையின் கீழ் இருக்கும் மாறுபாடு அல்லது கவலைக்குரிய மாறுபாடு என்று பெயரிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.