சீனாவை மொத்தமாக உலுக்கும் புதிய அச்சுறுத்தல்: திணறும் மருத்துவமனைகள்
சீனாவில் சுவாசம் தொடர்பான புதிய வைரஸ் மொத்தமாக பரவி வரும் நிலையில், மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நிமோனியா காய்ச்சலின் பாதிப்பு
பெய்ஜிங் மற்றும் லியோனிங்கில் உறுதி செய்யயப்படாத நிமோனியா காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து நிபுணர்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் இது மிக வேகமாக பரவி வருகிறது, இதனையடுத்து ProMED அமைப்பால் ஏற்கனவே ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
@getty
பல எண்ணிக்கையிலானவர்கள் மருத்துவமனைகளை நாடியுள்ளனர். இருமல் அல்லது எந்த அறிகுறிகளும் இவர்களில் இல்லை. ஆனால் கடுமையான காய்ச்சல் மற்றும் நுரையீரல் தொடர்பான சிக்கலால் அவதிக்குள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2019 டிசம்பர் மாத இறுதியிலும், இது போன்று மக்கள் கடுமையான காய்ச்சலால் மருத்துவமனைகளை நாடினர். ஆனால் உரிய பரிசோதனை முன்னெடுக்காமல் தவறிழைத்ததால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மரணமடைந்தனர்.
@getty
உலக சுகாதார ஸ்தாபனம்
அதே தவறை தற்போதும் செய்ய வேண்டாம் என மருத்துவ நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். தற்போது பரவும் வைரஸ் தொடர்பில் அதிக தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
சீனாவின் தற்போதைய நிலை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் போதுமான அளவு அக்கறை கொண்டுள்ளது. மட்டுமின்றி சீனாவிடம் இருந்து மேலதிக தரவுகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
@getty
இந்த புதிய வைரஸானது சிறார்களில் மட்டுமே தற்போது பரவி வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கவலை கொள்ள தேவையில்லை எனவும், அனைத்தும் கட்டுக்குள் இருப்பதாக சீனா பதிலளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |