உடனே கிளம்புங்கள்... இராணுவ படைகளுக்கு ஆப்கானிஸ்தான் புதிய பிரதமர் அதிரடி உத்தரவு
ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பதிவியேற்றுள்ள முகமது ஹசன் அகுந்த், இராணுவ படைகளுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வசம் வந்ததையடுத்து, நகரங்களில் உள்ள வீடுகளை, வாகனங்களை தலிபான் போராளிகள் ஆக்கிரமித்துவிட்டதாக பொதுமக்கள் பலர் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இப்பிரச்சனை தொடர்பில் ஆப்கானிஸ்தான் ஐக்கிய அமீரகத்தின் புதிய பிரதமர் முகமது ஹசன் அகுந்த் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
MOI, MOD மற்றும் உளவுத்துறையைச் சேர்ந்த அனைத்து இராணுவ வீரர்களும், பாதுகாப்புப் படைகளும் தனியார் வீடுகளை விட்டு வெளியேறி உடனடியாக அந்தந்த இராணுவ தளங்களுக்கு சொல்ல பிரதமர் முகமது ஹசன் அகுந்த் உத்தரவிட்டுள்ளார்.\
அதுமட்டுமன்றி, வாகனங்கள், உபகரணங்கள் சோதனை என்ற பெயரில் காபூல் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்குள் நுழைய யாருக்கும் அனுமதி இல்லை.
யாரும் யாரிடமிருந்தும் வாகனங்கள் அல்லது உபகரணங்களை எடுக்க அனுமதி இல்லை என பிரதமர் முகமது ஹசன் அகுந்த் உத்தரவிட்டுள்ளார்.