பறவைக்காய்ச்சலுக்கு முதல் நபர் பலி: விடை தெரியாத கேள்விகள்
உலகில் முதல் முறையாக, பறவைக்காய்ச்சலுக்கு ஒருவர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
பறவைக்காய்ச்சலுக்கு முதல் நபர் பலி
உலகிலேயே முதல் முறையாக பறவைக்காய்ச்சலுக்கு மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார். அந்த 59 வயது நபருக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டார். அவர், Influenza A virus subtype H5N2 என்னும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது ஆய்வகப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
பொதுவாக பறவைக்காய்ச்சலை உருவாக்குவது, H5N1 என்னும் வைரஸாகும். ஆனால், இந்த நபரை தாக்கியுள்ளது, அந்த வைரஸின் துணை வைரஸான H5N2 வைரஸ் ஆகும்.
இதற்கிடையில், உயிரிழந்த அந்த நபர், பறவைகள் மற்றும் கால்நடைகள் என எந்த விலங்குகளுடனும் எவ்வித தொடர்பும் இல்லாத நபர் என்பதால், அவருக்கு எப்படி இந்த பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆகவே, அவருக்கு எப்படி பறவைக்காய்ச்சல் ஏற்பட்டது என்பதை அறிவதற்காக மெக்சிகோ சுகாதார அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |