பிரித்தானியாவில் ஓமிக்ரானின் புதிய திரிபு கண்டுபிடிப்பு
ஓமிக்ரானின் புதிய திரிபை விசாரணையில் உள்ள மாறுபாடாக பிரித்தானியா சுகாதார பாதுகாப்பு நிறுவனம்(UKHSA) அறிவித்துள்ளது.
இந்தி திரிபு ஜனவரி 10 ஆம் திகதி பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிய திரிபு குறித்து UKHSA வெளியிட்ட தகவலில், ஓமிக்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த BA.2 என்றழைக்கப்படும் புதிய திரபு விசாரணையின் கீழ் இருக்கும் மாறுபாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
BA.2 பாதிப்புகளின் எண்ணிக்கை தற்போது குறைவாக உள்ளது, அசல் ஓமிக்ரானான BA.1 பிரித்தானியாவில் ஆதிக்கம் செலுத்துகிறது என UKHSA குறிப்பிட்டுள்ளது.
புதிய திரிபு குறித்து மேலதிக பகுப்பாய்வு இப்போது நடைபெறும் என்று UKHSA தெரிவித்துள்ளது.
தொற்றுநோய் தொடர்வதால் புதிய திரிபுகள் எதிர்பார்க்கப்படுகின்றன என UKHSA-ன் சம்பவ இயக்குனர் டாக்டர் மீரா சந்த் கூறியுள்ளார்.
வைரஸ்கள் உருவாகி மாற்றமடைவது இயல்பு, எனவே தொற்றுநோய் தொடரும்போது புதிய மாறுபாடுகள் வெளிவருவதை நாம் தொடர்ந்து பார்ப்போம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எங்கள் தொடர்ச்சியான மரபணு கண்காணிப்பு அவற்றைக் கண்டறிந்து அவை குறிப்பிடத்தக்கவையா என்பதை மதிப்பிட உதவுகிறது என்று டாக்டர் சந்த் கூறியுள்ளார்.