நியூசிலாந்தில் 14 வயதினருக்கு விதிக்கப்படவுள்ள தடை! விரைவில் வரும் புதிய சட்டம்
நியூசிலாந்தில் இளைஞர்கள் புகையிலைப் பொருட்கள் வாங்குவதற்கு தடை விதிக்க, அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்தை பொறுத்தவரை தற்போது இருக்கும் இளம் தலைமுறையினர் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகிவிடக் கூடாது என்பதற்காக, புகைப்பழக்கம் மற்றும் புகையிலை தொழில்துறையை கட்டுப்படுத்த நியூசிலாந்து அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும், எடுக்கப்படும் முயற்சிகள் சில, பலன் அளிக்க நீண்டகாலம் ஆகும் என்பதால், அரசு இளைஞர்கள் சிகரெட் வாக்குவதை தடை விதிக்க திட்டமிட்டுள்ளது. வரும் 2027-ஆம் ஆண்டில் 14 வயதுக்கு உட்பட்ட இளம் தலைமுறையினர், சிறுவர்கள் சிகரெட் வாங்க முழு தடை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளின் எண்ணிக்கையை குறைப்பது, அனைத்து பொருட்களிலும் நிகோடின் அளவை குறைப்பது என பல்வேறு திட்டங்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நியூசிலாந்து சுகாதாரத்துறை இணையமைச்சர் ஆயிஷா வெரால் கூறுகையில், இளம் தலைமுறையினர், சிகரெட் பிடிக்க கூடாது என்ற நிலையை உருவாக்க முடிவு செய்துள்ளோம்.
அதே போன்று இளைஞர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்ற சூழலை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.